உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இது தொடுதல் மூலமும் பரவும். எனவே மத்திய அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டினை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
3400 பேர் பலி..!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. மேலும் இந்த வைரஸினால் உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதுவரை 31 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 3400 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
யார் யாரையும் தொட வேண்டாம்..!
கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவும் என்பதால் யார் யாரையும் தொட வேண்டாம் எனவும், வரும் மார்ச் 31 வரை மத்திய அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டினை பயன்படுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |