இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் வரிவிதிப்பு விகிதத்திற்கு ஏற்றவாறு விலை ஏற்ற, இறக்கங்கள் மாறுபடும். கொரோனா ஊரடங்கு காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று விலை உயர்த்தப்பட்டு உள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் – டிச.2இல் நாகப்பட்டினத்தில் கரையை கடக்கும்!!
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.85.12-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.77.56 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வருமான இழப்பு ஏற்பட்டு தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு அவர்களை மேலும் அவதிப்பட வைப்பதாக உள்ளது.