தற்போதைய இந்திய அணியில் முன்னணி ஆல் ரவுண்டர்களாக திகழ்ந்த வருபவர்கள் தான் ஹர்திக் பண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா. இந்த நிலையில் இவர்கள் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பண மோசடி வழக்கில் ஹர்திக், க்ருணால் ஆகியோரின் சகோதரர் வைபவ் பாண்டியாவை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜயின் “GOAT” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ஹர்திக், க்ருணால், வைபவ் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருவருக்கும் தெரியாமல் ரூபாய் 1 கோடி வரை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றியதுடன், தன்னுடைய லாப சதவீதத்தையும் அதிகரித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.