எதிர்நீச்சல் சீரியலில் சித்தார்த்தை யார் கடத்தி வைத்திருந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டேன் என குணசேகரன் உமையாளிடம் சொல்கிறார். இன்னொரு பக்கம் தர்ஷினியின் திருமணத்தை நிறுத்த ஈஸ்வரி என்னென்னமோ முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் குணசேகரன் நான் தர்ஷினியின் திருமணத்தை நடத்திக் காட்டுவேன் என சவால் விடுகிறார்.
பிரதமர் மோடி வருகை: சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்? வெளியான அறிவிப்பு!!!
ஆனால் ஈஸ்வரி நிச்சயம் என்னோட பொண்ணுக்கு நான் புடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன் என்கிறார். இந்த பக்கம் சித்தார்த்தை கடத்தி வைத்தது சக்தி தான் என்பதை கரிகாலன் தெரிந்து கொள்கிறார். மேலும் சித்தார்த் சக்தி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை போனில் வீடியோ எடுக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் இந்த வீடியோவை போலீசில் காண்பித்து சக்தியை சிக்க வைப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.