நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமான ஒன்றாக உள்ளது. இதனால் இத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி 2024-25 ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிவடைய உள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்த நிலையில் தற்போது அதை மேலும் நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி நாளை இரவு 11:50 மணி வரை www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.