தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அறிமுகம் செய்த மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பலரும் இன்றளவும் பயனடைந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவை தொடர்ந்து கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பள்ளி குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்க உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தைகள் வயிறார சாப்பிட்டு விட்டு வகுப்பறையில் நன்கு கற்பார்கள் என நம்புகிறேன்.” எனவும் கூறியுள்ளார்.