தபால் அலுவலகங்களில் அதிக லாபம் தரும் முதலீடு திட்டங்களில், மிகவும் பயன்தரக்கூடிய திட்டமாக Post Office Monthly Income Scheme – (MIS) செயல்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டு கால முதிர்வு கொண்ட இந்த திட்டத்தில், முதலீடு செய்ய பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 வட்டி விகிதம் என தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.
அதன்படி திட்டத்தின் முடிவில் வட்டி மட்டுமே ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் கிடைக்கும். அதேபோல் இத்திட்ட முதலீட்டிற்கான வருமானத்தில் ரூ.5,500, பயனாளர்களின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். பயன் பெற விரும்புபவர்கள் அருகாமையில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.