தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இப்போது தேர்வுகள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த கோடை விடுமுறையின் போது பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் பல சுற்றுலா தளங்களுக்கு செல்ல திட்டமிடுவது வழக்கம்.
தற்போது இதற்கு ஏற்றார் போல் இந்த கோடை விடுமுறையில் சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் மார்ச் 31 ஆம் தேதியும், ஏப்ரல் 1ம் தேதியும் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.