பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு, 2022 நவம்பர் முதல் 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க, மத்திய நிதித்துறை ஒப்புதல் வழங்கி இருந்தனர். அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை போல, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எனினும் இதுவரையிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வாரத்தில் 5 நாள் வேலை மற்றும் ஊதிய உயர்வு வருகிற ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். இது வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் நிம்மதியை தந்துள்ளதாக கூறப்படுகிறது.