பணிப்பெண் சித்திரவதை வழக்கு.,  MLA மகன்-மருமகள்  ஜாமீன் குறித்து நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு!!!

0
பணிப்பெண் சித்திரவதை வழக்கு.,  MLA மகன்-மருமகள்  ஜாமீன் குறித்து நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு!!!
திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகளின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணை அவரது குடும்பத்தினர் சூடு வைத்து பல கொடுமைகள் செய்துள்ளனர். இதையடுத்து பல விசாரணைகளுக்கு பிறகு எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது அவர்கள் செய்த குற்றம் நிரூபணம் ஆனது.‌ இதனால் மகளிர் காவல் நிலையம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கேட்டு கொடுத்த மனுவை மெட்ராஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதைத்தொடர்ந்து குற்றவாளியான கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு,  புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த ஜாமின் மீதான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்த வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் ஏன் இவ்வளவு மெத்தனப்போக்குடன் காவல்துறை நடந்து கொள்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here