தமிழக ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக தென்னை விவசாயிகள் அனைவரும் ரேஷனில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் தென்னை விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும் என தென்னை விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.