அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பிற்கால தேவைக்காக மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்ட பலன்களை பெறுவதற்கான ஊதிய வரம்பு ரூ.6,500லிருந்து ரூ.15,000ஆக கடந்த 2014ஆம் ஆண்டு EPFO நிறுவனம் உயர்த்தியது. இதனால் பல நிறுவன ஊழியர்களும் வரவேற்பு தெரிவித்து பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊதிய வரம்பை ரூ.15,000லிருந்து ரூ.21,000 வரை உயர்த்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி ரூ.21,000 வரை ஊதியம் பெறும் இலட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட எந்த ஒரு நிறுவனமும் EPFO-இல் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை தெரிவித்துள்ளதால், பிற்காலத்தில் அரசு அமல்படுத்தலாம் என EPFO நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.