தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து..!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24ல் தொடங்கிய பொது ஊரடங்கு வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வரும் 31ம் தேதி வரை பஸ் போக்குவரத்து சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – சீனா ராணுவம் இடையே 4ம் கட்ட பேச்சுவார்த்தை – சீன படைகள் வாபஸ்..!
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோவை- காட்பாடி சிறப்பு ரயில்களும், அரக்கோணம் – கோவை இண்டர்சிட்டி ரயில்கள், கோவை மயிலாபுதுறை ஜன்சப்தி சிறப்பு ரயில், திருச்சி – நாகர்கோயில் சிறப்பு ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.