இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாராளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையாகி விட்டது. இதன் காரணமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டியது. தற்போது இந்த கட்டிட பணி முழுவதும் நிறைவடைந்துள்ளதால் நாளை மறுநாள் (மே 28) திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தினத்தை நினைவூட்டும் விதமாகவும், 75வது சுதந்திர தின விழாவுக்கு அர்பணிப்பதாகவும் ரூ.75 நாணயத்தை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்தியர்களை பெருமைப்படுத்தும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் விளங்கும் எனக்கூறி கட்டிட வளாகத்தின் வீடியோவை பெருமிதத்துடன் பிரதமர் மோடி வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அடக்கடவுளே.., பிரபல யூடியூபர் இர்பான் கார் திடீர் விபத்து.., பலியான மூதாட்டி!!
வியக்க வைக்கும் வகையில் உள்ள இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட வெள்ளி செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளனர்.