தமிழக 10, 11ம் பொதுத்தேர்வு மாணவர்களே.., துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!!

0
தமிழக 10, 11ம் பொதுத்தேர்வு மாணவர்களே.., துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!!
தமிழக 10, 11ம் பொதுத்தேர்வு மாணவர்களே.., துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 10 மற்றும் பிளஸ் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும், கடந்த மே 9ம் தேதி வெளியாகின. இதில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.39% மாணவர்களும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94% மாணவர்களும் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பொதுத்தேர்வை எழுதி உள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்காக விடை தாள் நகல் பெற விரும்பினால் மே 24ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான, துணைத் தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதில், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வரும் ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஒரே நைட்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு.., இரண்டாவது தடவையும் கைவிட்ருச்சு.., வடிவுக்கரசியின் உருக்கமான பேட்டி!!

இந்த தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் நாளை (மே 23) முதல் மே 27ம் வரை, பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசு சேவை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், கூடுதலாக 1000 ரூபாய் செலுத்தி மே 30 மற்றும் 31 ம் தேதியில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த துணைத் தேர்வுக்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் www.dge.tn.gov.in என்ற தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here