தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி “தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கென ரூ.800 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இனி வரும் காலங்களிலும் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்த உள்ளார். எனவே அனைத்து தரப்பினரும் தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.” என காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.
மே 15 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!