அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி (DA) உயர்த்தப்பட்டு வருவது வழக்கம். இந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மத்திய மற்றும் மாநில அரசு உயர்த்துவதாக அறிவித்தது. இதன்படி, ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% முதல் 4% வரை உயர்த்தி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவ்வாறு பல மாநிலங்களில் அகவிலைப்படியை உயர்த்திய போதும், தமிழகத்தில் இது குறித்து எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை. இதனால், நிலுவைத் தொகையுடன் அகவிலைப்படியையும் உயர்த்தி தர கோரி பல்வேறு போராட்டங்களை தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் நடத்தி வந்தனர்.
யாத்தே..,பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா? PS -1ன் வசூலை முறியடிச்சுரும் போலயே!!
சமீபத்தில் நடந்த சட்டசபையில் இந்த போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் என, அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடத்தாதல், மீண்டும் பாரதிய அரசு ஊழியர்கள், அகவிலைப்படியை உயர்த்துவதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு பிறகாவது, தமிழக முதல்வர், இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுவாரா?? என பொறுத்திருந்து பார்ப்போம்.