மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பார்ட் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் பார்ட் 2:
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம் என்றால் அது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் தான். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பலரும் இப்படத்தை எடுக்க முயன்று தோல்வியுற்ற நிலையில், படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து மணிரத்னம் சாதனை படைத்தார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி, கிட்டத்தட்ட 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம், கடந்த 30ம் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் சக்க போடு போட்டு கொண்டு தான் இருக்கிறது. மேலும் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 உலகமெங்கும் வெளியாகிய நிலையில், இதுவரை உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். மேலும் பொன்னியின் செல்வன் 2 வெற்றி படமாக அமைய இன்னும் ரூ. 75 கோடி வரை வசூலிக்க வேண்டும் என கூறப்படுகிறது. எனவே வரும் நாட்களில் படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்