நடிகர் அஜித்தின் தந்தை இறந்த நிலையில் தளபதி விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவரின் தந்தை சுப்ரமணியம் சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை காலமானார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அவரின் இறப்புக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதையடுத்து, எங்கள் தந்தையின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே நடக்க விரும்புகிறோம் என்று அஜித் கூறியபடியே அப்பாவின் உடல் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அஜித்தின் தாயார் தேம்பி தேம்பி அழுத நிலையில், அஜித் கட்டியணைத்து ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் செட்டிலாக பிளான் போட்ட சூர்யா-ஜோதிகா.., அவர்களே வெளியிட்ட பதிவு!!
மேலும் இறுதி ஊர்வலத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு நேரில் சென்ற தளபதி விஜய், அப்பாவை இழந்து தவிக்கும் அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின், ஏ.எல்.விஜய் போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram