உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தொடர்ந்து காலிறுதிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனைகள்!!

0
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தொடர்ந்து காலிறுதிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனைகள்!!
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தொடர்ந்து காலிறுதிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனைகள்!!

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் நிகாத் ஜரீன், மணிஷா மற்றும் நீத்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

உலக குத்துச்சண்டை:

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் லோவ்லினா மற்றும் சாக்ஷி சவுத்ரி 75 மற்றும் 52 கிலோ எடை பிரிவில் ஏற்கனவே காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டனர். இவர்களை தொடர்ந்து, இந்தியாவின் நிகாத் ஜரீன், மணிஷா மற்றும் நீத்து உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நேற்று போட்டியிட்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், 50 கிலோ எடை பிரிவில் நிகாத் ஜரீன், மெக்சிக்கோ வீராங்கனையை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியில், தொடர் தாக்குதலை மேற்கொண்ட நிகாத் ஜரீன் அதிரடியாக வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து, 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து தஜிகிஸ்தான் வீராங்கனையை 2 நிமிடத்தில் (128 வினாடி) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

எதற்காகவும், எந்த விஷயத்திற்காகவும் பொறாமை பட்டதே இல்லை.., ,மறைந்த கோவை குணாவை குறித்து பேசிய மதுரை முத்து!!

மேலும், 57 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் மணிஷா துருக்கியின் துர்ஹானை எதிர் கொண்டார். இந்த போட்டியில் முதல் 2 செட்டை வென்ற மணிஷாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், துருக்கி வீராங்கனை தோல்வியை தழுவினார். இதனால், மணிஷாவும் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here