இந்தியாவில் மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2வது சட்டப்பேரவை கூட்டமாக 2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மின்னணு முறையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் இடம்பெற உள்ளது என தமிழக மக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து தமிழர்களின் வீரம், கலை, கட்டிடம் என அனைத்து சிறப்பையும் கடல் கடந்து உலகிற்கு பறைசாற்றிய சோழர்களின் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைக்கப்படும் என முதல் அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து கடுமையான உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் படி வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.1,500யை உயர்த்தி ரூ.2,000ஆக வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,444 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கல்வி, மின்சாரம் உள்ளிட்ட துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவித்து வருகிறார்.