தமிழகத்தில் நேற்று சற்று குறைந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நகைக்கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. தற்போது கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் சற்று குறைந்து இருந்த தங்கத்தின் விலை தீடிரென புதிய உச்சத்திற்கு சென்று உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை 55 ரூபாய் அதிகரித்து ரூ. 4,608க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 440 ரூபாய் அதிகரித்து ரூ. 36,464க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.53.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 53,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.