தெலுங்கு சினிமாவில் 100 க்கும் மேற்பட்ட சிறந்த படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஜொலித்துக் கொண்டிருந்தவர் தான் கே.விஸ்வநாத். இவர் இயற்றிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்து இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து இவர் படங்களில் நடிகராகவும் களமிறங்கி தமிழ், தெலுங்கு, மொழிகளில் நடித்து வந்தார். மேலும் இவர் கோலிவுட் சினிமாவில் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, சிங்கம் 2, உத்தம வில்லன், லிங்கா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பாரதி கண்ணம்மா சீரியல் நாயகனின் சொந்த மகனை பார்த்துள்ளீர்களா?? முதல் தடவை லீக்கான போட்டோஸ்!!
இந்திய சினிமா துறையில் இவரின் பணியை பாராட்டும் வகையில் இந்திய அரசு இவருக்கு ஐந்து முறை தேசிய விருது வழங்கியுள்ளது. இந்நிலையில் 92 வயதை அடைந்த இவர் உடல் நலக்குறைவால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் உள்ள இவரது வீட்டில் காலமானார். இதை அறிந்த திரைத்துறையினர் மற்றும் உறவினர்கள் இவரது குடும்பத்தினருக்கு தங்களின் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.