தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழட்சி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை இலங்கை கடற்கரையில் மையம் கொண்டது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் கடலோர பகுதிகளில் கனமழை பதிவாகியிருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு தென்மேற்கு திசையில் நகரந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் தென்தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், வடதமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(03.02.2023)-முழு விவரம் உள்ளே!!!
அதன்படி நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் நாகப்பட்டின மாவட்ட ஆரம்ப பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கும், தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (03.02.2023) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் 4 மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.