உலக நாடுகள் பங்குபெறும் ஜி20 மாநாடுகளின் கூட்டமைப்பு தலைமை பண்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் நடந்த உச்சி மாநாட்டில் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் தான் இந்தியாவின் முக்கிய கருத்து” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதேபோல் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஜி20 தொடக்கநிலை மாநாடு வருகிற ஜனவரி 30, 31ம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி ஜி20 மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்குமிடம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவு நாளை (ஜனவரி 29) காலை முதல் ஜனவரி 31ம் தேதி வரை அமல்படுத்த உள்ளதாக ஆட்சியர் வல்லவன் தகவல் தெரிவித்துள்ளார்.