ஜனவரி 27ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தென்னக ரயில்வே
வருகிற ஜனவரி 26ம் தேதி தேதி அன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்காக ஆயத்த ஏற்பாடுகளை அரசாங்கம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்புகளை ஆயுதப் படையினரும், போலீசாரும் செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் குடியரசு தின விழா அன்று கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது தாம்பரம் TO நாகர்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் வரும் 25ஆம் தேதி இரவு 10.20 க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
தேங்காய் நாரை இனி waste பண்ணாதீங்க.., உங்க முடி சும்மா கரு கருன்னு வளர இந்த simple டிப்ஸ் போதும்!!
அதேபோன்று மறு மார்க்கத்தில் வருகிற 29 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் செல்ல உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன் பதிவு இன்று தொடங்கியது. பயணிகள் எதிர்பார்க்காத சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளதால் டிக்கெட் முன்பதிவு குவிந்து வருகிறது.