பிரபல பெங்காலி பாடகர் சுமித்ரா சென், தன் 89 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி இறப்பு :
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெங்காலி மொழியில் பல புகழ் பெற்ற பாடல்களை பாடியவர், பாடகி சுமித்ரா சென். வங்கத்து பாடகர் ரவீந்திரநாத் தாகூரின் இசையை, உலகம் முழுவதும் கொண்டு செல்வதில் அரும் பணியாற்றிய இவர்களது குடும்பம், பெங்காலியின் மிகச் சிறந்த இசை குடும்பம் என பெயர் பெற்றிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை நலிவுற்று, பாடகி சுமித்ரா படுத்த படுக்கையாக இருந்து வந்தார். இன்று காலை திடீரென இவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, தன் 89 வயதில் வீட்டிலேயே இவரது உயிர் பிரிந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவரது இறப்பு குறித்து பதிவிட்ட, மேற்குவங்க முதல்வர் மம்தா இசை உலகின் மிகப்பெரிய தசாப்தம் இன்று நம்முடன் இல்லை எனவும், அவரின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற வேண்டுகிறேன் என்றும் பதிவிட்டார். தற்போது பலரும், இறந்த பாடகி சுமித்ரா சென் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.