ரேஷன் கடைகளில், நடந்து வரும் முறைகேடுகள் குறித்து கூட்டுறவுத்துறை அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மீறினால் நடவடிக்கை பாயும் என்றும், அறிவித்துள்ளது.
அதிரடி நடவடிக்கை:
மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, உணவு வழங்கல் துறையின் வாயிலாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மலிவு விலையில் கிடைக்கும் இந்த ரேஷன் பொருட்களை, பல சாமானிய மக்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சமீப நாட்களாக இந்த ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், தேவையற்ற பொருட்களை வாங்கச் சொல்லி விற்பனையாளர்கள் வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து புதிய புகார் எழுந்துள்ளது.
அரியர் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்.,21 ஆண்டுக்குப் பின் கிடைத்த வாய்ப்பு! தவறாம யூஸ் பண்ணிக்கோங்க!!
அதாவது பயனர்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்காமலேயே அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும், விற்பனையாளர்கள் போலி பில் போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனி இது போன்ற நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.