ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதந்தோறும் ஐந்து கிலோ இலவச உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படும், என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.
அரசு அதிரடி :
நாடு முழுவதும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய விலை ரேஷன் பொருட்களை பல சாமானிய மக்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த கொரோனா காலகட்டத்தில், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு இரண்டு வேளை ரொட்டி வழங்கும் நோக்கத்தில், மாதந்தோறும் ஐந்து கிலோ உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான திட்டங்களை வகுத்துள்ள மத்திய பொது விநியோகத் துறை, விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலிண்டர் பயனர்களுக்கு ஷாக் – மொத்த சலுகையும் ரத்து! இனி முழு தொகையும் செலுத்த வேண்டியது தான்!!
ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச மளிகை பொருள் கிட் போன்ற சிறப்பு வாய்ந்த பல திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த சூப்பர் அறிவிப்பு ரேஷன் பயனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.