பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் ஊதிய உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஓன்று வெளியாகியுள்ளது.
EPFO:
ஊழியர்கள் ஓய்வூதியத் திருத்தத் திட்டம் மத்திய அரசால் கடந்த செப்டம்பர் 1, 2014ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. மேலும் epfo அமைப்பு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15,000 என நிர்ணயித்துள்ளது. இதையடுத்து ஊழியர்கள் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்ய வேண்டும். மேலும் ஊழியர் ஒருவர் 20 ஆண்டுகள் பணியில் நிறைவு செய்துள்ளார் எனில் அவருக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் தற்போதைய விதிமுறைப்படி, ஊழியர் ஒருவர் எத்தனை வருடங்கள் பணி புரிந்தாலும் அவர்களின் ஓய்வூதியம் அதிகபட்சமாக ரூ.15000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பழைய விதிமுறைப்படி, 14 ஆண்டுகள் பணி புரிந்தவுடன் ஊழியர் சுமார் ரூ.3000 ஓய்வூதியம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.
அடேங்கப்பா.,மாதம் ரூ.18,500 – ரூ.9250 வரை கிடைக்கும்., அரசின் சூப்பர் திட்டம்! முழு விவரங்கள் உள்ளே!!
மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களின் பென்ஷன் ஃபார்முலாவைக் கணக்கீடுவதன் மூலம் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் 300% அதிகரிப்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.