ஏர் இந்தியா நிறுவனத்தின் நூறு சதவீத பங்குகளும் தனியாருக்கு விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியாவினை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அதன் இணைப்பு நிறுவனமான AIXL மற்றும் AISATS ன் 50 சதவீதம் பங்குளையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 80,000 கோடி கடனில் தத்தளித்து வருகிறது. இதனால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே அதனை வாங்க விரும்பும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |