தென் மாவட்டமான மதுரையில், முக்கிய முதலீடுகளை கொண்டு வந்து தொழில் உற்பத்தியை பெருக்க முயற்சி எடுத்து வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் அதிரடி:
தமிழகத்தில், சில ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்களில் பெரும்பாலானோர், தங்கள் படிப்புக்கேற்ற வேலை பார்க்காமல் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்ய அரசு, பல்வேறு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டமான மதுரையில் சொல்லக்கூடிய அளவில் பெரிய நிறுவனங்கள் இல்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் டைட்டில் ஐடி பார்க், சிப்காட் எஸ்டேட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை தேடி இளைஞர்கள் சென்னை செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனை குறைக்க, மதுரையில் பல முன்னணி தொழில் நிறுவனங்களை நிறுவி, தென் மாவட்ட இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க நிதி அமைச்சர் முக்கிய திட்டம் ஒன்றை தீட்டி உள்ளார். மதுரைக்காரரான இவர், இங்கு கொண்டு வரவுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களால் தென் மாவட்ட இளைஞர்கள் பயனடைவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.