அண்மையில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி, பிரிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு ரவீந்தர் அதிரடி விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
ரவீந்தர் பதிலடி:
தமிழ் சினிமாவின் முன்னணி சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகிய இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இது 2வது திருமணம் என்பதால் திரும்பும் பக்கம் எல்லாம் நெட்டிசன்கள் இவர்களை விமர்சித்து வந்தனர். மேலும், மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில், ரவீந்தர் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது என் உதவியாளர் எனக்கு போன் செய்து, நீங்களும் மேடமும் நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் பிரிந்து விட்டதாக ஒரு செய்தியை யூடியூபில் பார்த்தேன். அதெல்லாம் உண்மை இல்லையே? என கேட்டார். இதைக் கேட்டதும் அதிர்ந்து விட்டேன். எங்கள் வாழ்க்கை நன்றாக உள்ளது. யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இனிமேல் யூடியூப், பேட்டி என்று சொல்லிக்கொண்டு யாரும் எங்களை அணுக வேண்டாம் என எச்சரித்துள்ளார்