பிரபல நடிகையான நயன்தாரா இப்பொழுது விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து நடித்து வருகிறார். அதிலும் பல கண்டிஷன்களை போட்டு தான் படங்களில் கமிட்டாகி வருகிறார்.
நயன்தாராவிற்கு இருக்கும் ப்ளஸ் பாயிண்ட்டே அவரது கதை தேர்ந்தெடுக்கும் திறன் தான். ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தவர் இப்பொழுது முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் அவரது படங்களும் முன்னணி நடிகர்கள் அளவிற்கு ஹிட் கொடுத்து வருகிறது. இப்படி இருக்க நயன்தாரா வாழ்க்கையிலும் சில சறுக்கல்கள் இருக்க தான் செய்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, நயன்தாரா ஆரம்பத்தில் தேர்தெடுத்த சில படங்கள் அவருக்கு எதிராக தான் அமைந்தது. சரத்குமாருடன் இணைந்து நடித்த தலைமகன் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதாபாத்திரம் அமையவில்லை.
கொலையுதிர்காலம், டோரா, ஐரா போன்ற படங்களுக்கு நயன்தாராவிற்கு பிளாப் தான். அதுமட்டுமில்லாமல் பிரபு தேவா இயக்கிய வில்லு படத்திலும் நயன்தாரா பாட்டுக்காக மட்டும் தான் பயன்படுத்தப்பட்டிருப்பார். மேலும் அந்த படமும் பிளாப் தான் ஆனது. இதெல்லாம் தவிர்த்திருந்தால் மேலும் ஹிட் படங்களை கொடுத்திருப்பார்.