ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பரவ ஆரம்பித்த தட்டம்மை நோய்க்கு கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
தட்டம்மை நோய்:
தற்போது உலகமே கொரோனா தொற்றால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருக்கும் நிலையில் அடுத்து குரங்கு அம்மை தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல நோய் தொற்று கட்டுப்பாடுகள் எல்லா நாட்டிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிம்பாப்வேயில் பரவத் தொடங்கிய தட்டம்மை நோய் தற்போது அந்நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் தோல் தடிப்புகள், காய்ச்சல், குமட்டல் மற்றும் கண் வலி போன்றவைகளாகும்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த நோய் வேகமாக தாக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த நோயால் கிட்டத்தட்ட 157 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 2 ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஜிம்பாப்வே நாட்டில் வசிக்கும் ஆறு மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்று ஜிம்பாப்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.