ரஜினி நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்கள் தள்ளிப் போகலாம் என்பதால் படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
படக்குழு அதிர்ச்சி:
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது அண்ணாத்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படத்தில் எதிர்பார்த்த அளவு ரீச் கொடுக்காததால் , இவர் இந்த படத்தை இயக்குவாரா? என கேள்வி எழுந்தது. ஆனால், இந்தப் படத்தை இயக்குவது நெல்சன் தான் என அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
படத்திற்கான, நடிகர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங் விரைவில் துவங்குவதாக இருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருந்தது.
ஆனால் தற்போது அங்கு, தெலுங்கு திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் தள்ளிப் போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்