தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித தடையும் இன்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அறிவித்து உள்ளது.
ரேஷன் பொருட்கள்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். உரிய வருமானம் இன்றி தவிப்பதால் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு வரும் 29ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கேச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தின் படி ஜூன் 1 முதல் இலவச பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஜூன் 5ம் தேதி வாராந்திர வெள்ளிக்கிழமை விடுப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால் இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக அன்றும் கடைகள் செயல்படும் என உணவுப் பொருட்கள் வழங்கல் துறை தெரிவித்து உள்ளது. இதற்கு பதிலாக ஜூன் 19ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |