தமிழகத்தில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல் ஆகுமா? என்ற கேள்விக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம் :
கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் வைரஸ் பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதுவும், குறிப்பாக உத்தர பிரதேசம், கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் புதிய உச்சம் தொட்டு வருகிறது. நாள்தோறும் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதிப்பு அறிகுறிகள் தென்படுகிறதா? என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் மீண்டும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என புது விளக்கம் கொடுத்துள்ளார். இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்