பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் பாட்டி, பத்மா ராணி ஓம் பிரகாஷ் தனது 91 வயதில் காலமான செய்தி இந்தி திரையுலகில் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம் :
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரித்திக் ரோஷன். அவரது, தாய் பிங்கியின் அம்மா பத்மா ராணி. இவரது கணவர் ஓம் பிரகாஷ், ஆப் கி கசம் என்ற படத்தின் மூலம் பிரபல இயக்குனராக வலம் வந்தார். பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 93 வயதில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இவரது மனைவி பத்மா ராணி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார்.
இவரது மகள், பிங்கி அவரை கவனித்து வந்தார். இந்த நிலையில், பத்மா ராணி வயது மூப்பு காரணமாக நேற்று தனது 91 வது வயதில் உயிரிழந்தார். ரித்திக் ரோஷன் பாட்டி மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியா வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்