பீஸ்ட் படத்தை விட கே ஜி எப் 2 படத்துக்கு சென்னை ரோகிணி திரையரங்கத்தில், அதிகமான காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள சம்பவம் விஜய் ரசிகர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை பற்றி பாரதி எடுத்த முடிவு., அதிர்ந்து போன வெண்பா.. பாரதி கண்ணம்மா பரபரக்கும் அப்டேட்!!
அதிர்ச்சி சம்பவம்:
நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும், 35 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெளியான அடுத்த நாளே அதாவது, ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் 2 படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 2ம் பாகம் வெளியாக உள்ளது.
இது பீஸ்ட் படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கத்தில் இரண்டாவது நாள் காட்சியில், பீஸ்ட் படத்தைவிட கேஜிஎப் 2 படத்துக்கு அதிக காட்சிகள் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையும் மீறி, பீஸ்ட் படம் வெளியாகி வரலாற்று சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்கள் பாசிட்டிவாக பேசி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்