முடிவுக்கு வந்த வார இறுதி ஊரடங்கு – கட்டுப்பாடுகளை நீக்க முதல்வர் முடிவு!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

கொரோனா நோய் தொற்றால் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கில் பல்வேறு முக்கிய முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தற்போது டெல்லி அரசு வார இறுதி ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வர முடிவெடுத்துள்ளது.

வார இறுதி ஊரடங்கு:

இந்தியாவில் தற்போது உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது தொற்று பரவலின் வேகம் சற்று குறைந்து வருகிறது.

எனவே தொற்று பரவல் குறைவு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வார இறுதி ஊரடங்கை தளர்த்த முடிவெடுத்துள்ளார். மேலும் டெல்லியில் வார இறுதி நாட்களில் கடை, வணிக வளாகத்தை திறக்கவும், 50% ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி இதற்கான அறிக்கையை துணை நிலை ஆளுநருக்கு கெஜ்ரிவால் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here