அம்பலமான பிக் பாஸ் பாவனியின் உண்மை முகம் – தொழிலதிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரல்!!

0

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 யில் கலந்து கொண்டு இறுதி போட்டியாளராக மூன்றாவது பரிசை தட்டிச் சென்றவர் நடிகை பாவனி . இவரை பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகை பாவனி :

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை பாவனி. அதனை தொடர்ந்து சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் பிறகு சன் டிவியில் வெளிவந்த பாசமலர் மற்றும் விஜய் டிவியில் சின்ன தம்பி ஆகிய சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார். மேலும் பாவனியின் கணவர் தற்கொலை விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன் மேல் இருந்த நியாயத்தையும், தன் கணவரை பற்றி கூறி இருந்தார். மேலும் அவரவர் குடும்பங்கள் வரும் டாஸ்க்கில் ராஜு மற்றும் அவரது மனைவியை பார்த்ததும், அவர் இருந்து இருந்தால் என்னை வந்து பார்த்து இருப்பார் என்று பிரியங்காவிடம் கூறி இருந்தார். ஆனால் பவானி தன் கணவர் இறந்த பிறகு தொழிலதிபர் அனந்த ஜாய் உடன் டேட்டிங் செய்ததாகும், மேலும் தாய்லாந்து சென்று அனந்த ஜாய் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாவனி அவருடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

அதன் பிறகு புதிதாக ஒரு வீடு ஒன்றை கட்டி அதில் பூஜை செய்யும் போது கணவர் இடத்தில் அந்த தொழிலதிபரை வைத்து உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டில் பவானி நன்றாக நடித்து உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here