தற்போது உள்ள ஓமைக்ரான் வைரசை விட மிகக் கொடுமையான வைரஸ் ஒன்று அடுத்து வரும் என இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து விஞ்ஞானி ரவீந்திர குப்தா எச்சரித்துள்ளார்.
விஞ்ஞானி எச்சரிக்கை :
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா 2ம் அலை தொற்றில் இருந்து நாடு சற்று மீண்டு வரும் நிலையில், தற்போது 3ம் அலை தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து விஞ்ஞானி ரவீந்திர குப்தா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, தற்போது புழக்கத்தில் உள்ள ஓமைக்ரான் வைரசை விட, மிகவும் சக்தி வாய்ந்த அடுத்த வைரஸ் உலகத்தை தாக்கும் என்றும், அதற்குள் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருப்பது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். விஞ்ஞானியின் இந்த தகவலால், உலக நாடுகளில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்