பேரிடரால் பெருந்துயரில் தமிழகம் – தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

0

அதீத கனமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. காலம் தாழ்ந்து தொடங்கி இருந்தாலும், இந்த மழை பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களாக சென்னையில் பெருமழை பெய்து தலைநகரம் தத்தளித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனை அடுத்து, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், மழையின் தீவிரத்தை உணர்ந்து தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதாவது, நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய  தேதிகளில் ரெட் அலர்ட் விடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த இரு நாட்களில் தமிழகத்தில் மிதமான மழை முதல் மிக கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here