கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீம்ஸ் போடும் மீம் கிரியேட்டர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வார்கீஸ் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
தற்போது உள்ள இணையமயமான உலகில் மக்கள் எல்லா செய்திகளையுமே மீம்ஸ் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டனர். நல்ல விஷயங்களாகட்டும், ஏதாவது குற்றங்கள் ஆகட்டும் அனைத்துமே மீம்ஸ் வடிவில், மீம் கிரியேட்டர்கள் வழங்குவதால் மக்களிடம் எளிதாகச் சென்று சேர்ந்து விடுகிறது. மேலும் செய்தியாக படிப்பதை விட மீம்ஸ் ஆக பார்ப்பது மக்களுக்கு எளிதில் புரிந்து விடுகிறது.
இவ்வாறு மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் மீம் கிரியேட்டர்களை கொண்டாட மார்ச் 26 ஆம் தேதி மீம்ஸ் கிரியேட்டர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பலர் தங்களின் பொறுப்பை உணர்ந்து மக்களை சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைத்து வருகின்றனர். எனவே அவர்ளுக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதாவது கொரோனாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீம் போடுபவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வார்கீஸ் அறிவித்துள்ளார். சிறந்த 10 மீம்ஸ்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்