மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள லத்புரா காஸ் என்ற கிராமம் சிறந்த சுற்றுலா கிராமமாக அறிவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சிறந்த சுற்றுலா கிராமம்:
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஒரு கிராமத்திற்கு ஐ நா சபை ஒரு முக்கிய அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்த கிராம வாசிகளும், அங்கு சுற்றுலா பயணிகளாக வருபவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அந்த கிராமத்தின் பொருளாதார தேவைகளும், அடிப்படை வசதிகளும் மேம்பாடு அடைய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
அதாவது, மத்திய பிரதேச மாநிலத்தில் லத்புரா காஸ் என்ற ஒரு அழகிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களை வைத்தும், இங்குள்ள சூழியல் பல்லுயிர் தன்மையை கருத்தில் கொண்டும் ஐக்கிய நாடுகள் சபை இந்த கிராமத்தை சிறந்த சுற்றுலா கிராமமாக தரம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐநாவின் அறிவிப்பு இந்த கிராம வாசிகளிடம் பேரானந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு விளக்கமளித்துள்ள ஐ நா சபை, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த கிராமம் மன நிம்மதியையும், ரம்மியமான சூழலை வழங்குவதாலும் இதற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்