டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16 வது பாராலிம்பிக் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்தியா இந்த போட்டியில் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் அவனி லெகாரா இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
இது பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவானிக்கு அடுத்து சீனாவின் க்யூபிங் ஜாங் 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், உக்ரைன் நாட்டின் இரினா 227.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
அவனிக்கு இந்திய பிரதமர் உட்பட பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் தெரிவித்துள்ள வாழ்த்தில் உங்களுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு என அவனியை பாராட்டியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்