பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மயூவிற்காக ராஜேஷிடம் சண்டை போட எப்படியும் பாக்கியா கண்ணில் இருந்து தப்பித்து விடுகிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
இனியாவை ஸ்கூலுக்கு அழைத்து வர சென்ற கோபி கண்ணில் மயூவும் ராஜேஷும் சிக்குகின்றனர். அதாவது மயூவை கடத்த ராஜேஷ் அங்கு வர வறுபுறுத்தி தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அப்பொழுது அதனை பார்த்த கோபி மயூவை அதிலிருந்து காப்பாற்றுகிறார்.
போலீஸிற்கு கால் செய்து நடந்தவற்றை சொல்கிறார். அப்பொழுது போலீஸ் அங்கு வர ராதிகாவிடம் விசாரிக்கின்றனர். ராதிகாவும் ராஜேஷ் கொடுமைபடுத்துவதை பற்றி சொல்ல அவரை போலீஸ் கைது செய்கின்றனர்.
கோபியின் பின்னால் பாக்கியா மற்றும் ஜெனி நிற்பதை பார்த்து ஷாக்காகிறார். எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று ஏதேதோ சொல்லி தப்பித்து செல்கிறார். அதன் பிறகு வீட்டிற்கு வரும் கோபியின் தோள்பட்டையில் ஏதோ காயம் இருக்கிறது. அதனை பார்த்த குடும்பமே பதறுகிறது.
அனைவரும் கோபிக்கு மருந்து எடுத்து வருகின்றனர். அனைவரும் சுற்றி அமர்ந்து கொள்கின்றனர். பாக்கியா எப்படியோ தத்தி தத்தி மாடிக்கு வந்து விடுகிறார். அப்பொழுதும் பாக்கியாவை சுடுதண்ணீர் வைத்து எடுத்து வர சொல்கின்றனர்.
பாக்கியாவிற்கு அவ்வளவு அடிபட்டு ஏதும் கேக்காத குடும்பம் அவருக்கு சிறிய காயம் என்றதும் இந்த அளவிற்கு செய்கின்றனர். மேலும் சுடுதண்ணீரை எடுத்து செல்ல முடியாமல் பாக்கியா இருக்க அதனை வெளியில் இருந்து வரும் எழில் பார்த்து விடுகிறார். இதோடு ப்ரோமோ முடிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்