இறுதிச்சுற்று என்ற குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளியான படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரித்திகா. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் கடலில் பல்டி அடிக்க நினைத்து, தவறி விழுந்ததை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
குத்துச்சண்டை வீரராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரித்திகா சிங். அந்த துறையிலும் பல சாதனைகளை படைத்து உள்ளார். இந்நிலையில் குத்து சண்டையை கருவாக கொண்ட இறுதி சுற்று என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சினிமா உலகில் அறிமுகமானார். அவரின் முதல் படத்திலேயே அவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று உள்ளார்.
அதன் பிறகு தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் தன்னுடைய படங்களின் மூலம் கிடைத்த ரசிகர்களை அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மூலம் மகிழ்வித்து வந்தார். அந்த வகையில் தற்போது அம்மணி தன்னுடைய புகைப்படங்களை குளம், கடற்கரை என வித வித லொகேஷன்களில் எடுத்து வருகிறார்.
அதன்படி, சமீபத்தில் குளக்கரையில் போட்டோ ஷூட் நடத்திய போது தண்ணீரில் கால் வழுக்கி குளத்தினுள் விழுந்து விட்டார். அவரின் இந்த வீடியோ படு வைரலானது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் கடலில் பல்டி அடிக்க நினைத்த ரித்திகா முதலில் தவறி கடலின் உள்ளே விழுந்து விடுகிறார். அந்த பிறகு மீண்டும் முயற்சித்து செம அழகாக பல்டி அடித்தார். மேலும் அந்த வீடியோவில் துடுப்பை கொண்டு கடலில் பயணம் செய்தல் உள்ளிட்ட பல சேட்டைகள் செய்து உள்ளார். அவரின் இந்த பல்டி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்