நடிகை ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய அடுத்த தெலுங்கு படமான “105 மினிட்ஸ்” படத்தில் ஒரு அதிரடி முயற்சியை செய்ய இருக்கிறார். தற்போது அது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்ட ஹன்சிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகை ஹன்சிகா கதாநாயகியாக அறிமுகம் ஆவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். தன்னுடைய 15 வயதில் தெலுங்கில் தேசமுதுரு என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். இந்த படத்திற்காக பல விருதுகளையும் ஹன்சிகா வென்றார். பின்னர் தமிழில் இருந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.
மாப்பிளை படத்தில் நாயகியாக நடித்தார். இவரின் கொழுக் மொழுக் அழகால் மயங்கிய திரையுலகம் தொடர்ந்து இவருக்கு எங்கேயும் காதல், வேலாயுதம், சிங்கம், புலி, மான் கராத்தே, வாலு போன்ற பல படங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு படிப்படியாக படவாய்ப்புகள் கம்மி ஆகியது.
தற்போது இவர் தமிழில் மகா படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவர் தெலுங்கில் 105 மினிட்ஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரே ஷாட்டில் ஹன்சிகா மட்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இந்த புது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்